பள்ளிவாசலுக்கு சென்று திரும்பி வரும் போது வீட்டு முன்னால் மர்மப் பொதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, April 28, 2019

பள்ளிவாசலுக்கு சென்று திரும்பி வரும் போது வீட்டு முன்னால் மர்மப் பொதி



வெல்லவாய, மஹவெல்லகம முஸ்லிம் வீடொன்றின் முன்னாள் வெடிபொருள் ஒன்றை மறைத்து வைக்க முற்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்று திரும்பி வரும் போது தனது வீட்டிற்கு முன்னாள் சிலர் சந்தேககத்திற்கிடமான முறையில் நடந்து கொள்தை அறிந்த அவர் உடனடியாக பொலிஸாரிற்கு அழைப்பு விடுத்து குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார், குறித்த நபர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது அவர்களிடம் இருந்து வெடிபொருள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர்கள் இனங்களுக்கு இடையிலான முறுகலை ஏற்படுத்தவதற்காக குறித்த முஸ்லிம் நபரின் வீட்டிற்கு முன்னாள் வெடிபொருளை மறைத்து வைப்பதற்காக வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.