ரயில் முன்னால் பாய்ந்த 17 வயது பள்ளி மாணவி... வீட்டிலிருந்து அழுது கொண்டே வெளியேறிய பின்னர் எடுத்த முடிவு - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, April 19, 2019

ரயில் முன்னால் பாய்ந்த 17 வயது பள்ளி மாணவி... வீட்டிலிருந்து அழுது கொண்டே வெளியேறிய பின்னர் எடுத்த முடிவு

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ரெயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் மகள் காவ்யா (17). இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியிருந்த காவ்யா அதன் முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. இதில் அனைத்து பாடங்களிலும் காவ்யா தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் அவர், 600-க்கு 244 மதிப்பெண்களே எடுத்திருந்தார். இதனால் காவ்யா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். வீட்டில் தனியாக இருந்த அவர், அழுதுகொண்டே வெளியேறினார்.

பின்னர் ரெயில்வே தண்டவாளத்தின் அருகில் அமர்ந்து, ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது கடலூர் மார்க்கத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ரெயில் முன் காவ்யா பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

காவ்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து, உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதை தொடர்ந்து பொலிசார் காவ்யாவின் சடலத்தை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.